Monday, March 30, 2009

மகாவீரர் பற்றிய புத்தகம்..

தங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொண்ட திருவாளர்கள் பானுகுமார், அஜித்தாஸ் மற்றும் மஞ்சுநாத் அவர்களுக்கு நன்றி.

நான் சமீபத்தில் திரு ஜெகாதா அவர்கள் எழுதிய "மகாவீரர் - வாழ்வும் தொண்டும்" என்ற நூலை சிங்கப்பூர் தேசிய நூலக வாரியத்தில் எடுத்து படித்தேன். வர்தமானரின் இளமை முதல் முக்தி வரை சுருக்கமாக ஆனால் முடிந்த வரை எல்லா செய்திகளையும் உள்ளடக்கி எழுதி உள்ளார். பா ஹு லனுக்கு உபதேசம், மகாவீரரின் வாழ்க்கையில் கோசாலனின் பங்கு, ஹடயோகமும் பகைமையும், சோமலசாரியன் செய்த யாகம், பிம்பிசாரனின் வாழ்வில் மகாவீரர், ஜைன பௌத்த உறவு போன்ற பகுதிகளை சுருக்கமாக ஆனால் புரியும்படி ஆசிரியர் விளக்கி உள்ளார்.

மகாவீரரின் போதனை முத்துக்களை தருவது ஆச்சர்யம் அல்ல. ஆனால் தமிழக ஜைனர்கள் இன்றும் அன்றாடம் தீர்தங்கரர்களை வழிபடும் ஜெயமாலை ஸ்துதி, சிறிய, பெரிய புஷ்பாஞ்சலி ஸ்தோத்திரம், ஜலாதி அஷ்டகம், மஹாவீராஷ்டகம் , மகாவீரரின் சாசன யக்ஷன் மாதங்க யக்ஷன், சாசன யக்ஷி சித்தாயிகா பற்றியும், பிரதிஷ்டா சார சங்க்ரகம் ஆகிய சமஸ்க்ருத -தமிழ் ஸ்தோத்திரங்களை இணைத்திருப்பது ஆச்சர்யமே.

புத்தக விவரம்:
நூலின் பெயர்: மகாவீரர் - வாழ்வும் தொண்டும்
ஆசிரியர் - திரு ஜெகாதா
வெளியீடு:
ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பழைய எண் 24, கிருஷ்ணா தெரு, தியாகராய நகர், சென்னை -600017 Tel: 24331510 Email: shreeshenbaga@ yahoo.com
விலை: ரூ 45.00



Tuesday, March 17, 2009

திரு வெங்கட் சாமிநாதனின் சிறந்த கட்டுரைகள்..

தமிழகத்தின் தலைசிறந்த இலக்கிய ஆளுமைகளில் ஒருவரும், விமர்சன பிதாமகருமான திரு வெங்கட் சாமிநாதனை எனக்கு மிகவும் பிடிக்கும். சில சமயங்களில் அவருடைய கருத்தை நான் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் கூட, அவரின் நியாயமான, நேர்மையான விமர்சனங்கள் மிகவும் ஆச்சர்யதிற்குரியவை.
அவரின் "இந்திய இலக்கியம் - வாழ்க்கை கூறுகளும் பண்புகளும்" என்ற தலைப்பில் மூன்று கட்டுரைகளை படித்து மகிழ்ந்தேன். இவற்றை படிக்கும்போது, சமஸ்கிருதத்தையும், ப்ராக்ருததையும், ஹிந்தியையும் படிக்காமல் போனதை எண்ணி வருந்துகிறேன். படித்திருந்தால் மேலும் தமிழுக்கு சேவை(?)செய்திருக்கலாம்.

Monday, March 16, 2009

தமிழ் சமணம் Blog பற்றி...

என் அறிவுக்கு எட்டிய வரை, ஜைன மதத்தை பற்றி தமிழில் "Blog" ஆரம்பித்த முதல் ஜைனர் திரு பானுகுமார் அவர்கள்தான். அவரின் அடியொற்றிதான் நான் இந்த முயற்சியில் இறங்கினேன். அவரை போல் தரமான எழுத்தை என்னிடம் எதிர்பார்க்காதீர்கள். அவரின் "தமிழ் சமணம்" உங்களுக்கு பயனளிக்க கூடும்.

ஜெயமோகனின் விமர்சன பார்வையில் ஜைனம்

எழுத்தாளர் திரு ஜெயமோகன் ஜைனத்தை பற்றி "நீதியும் நாட்டார் விவேகமும்" என்ற கட்டுரையில் எழுதுள்ளர். நன்றி: திண்ணை இணைய தளம்.

பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் - சிந்தாமணி பற்றி..

ஜெயமோகன் பற்றி அறிந்திராத தமிழ் வாசகர்கள் குறைவு. தமிழ் நாட்டின் நிகழ்கால எழுத்தாளர்களில் சிந்திக்க வைக்கும் எழுத்தாளர். அவரின் "விஷ்ணுபுரம்" என்னை மிகவும் கவர்ந்த புத்தகம். நீங்கள் சுலபமாக (?) அறிந்துகொள்ள வேண்டும் என்றால் "நான் கடவுள்" என்ற திரைப்படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதியவர். அவரின்
சீவக சிந்தாமணி பற்றிய கட்டுரை.