25 ஆண்டுகட்கு முன்பு சென்னையில் என் தந்தை "ஜைன தர்மம் என்ன சொல்லுகிறது?" என்ற புத்தகத்தை குறளகத்தில் வாங்கினார். மிக எளிமையான, ஆனால் மிக ஆழமான அறிமுகம் தரும் அற்புத புத்தகத்தை என் தந்தையின் நண்பர் வாங்கி, மீண்டும் தர மறந்து, கிட்டதட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சமீபத்தில் எங்களுக்கு திரும்ப தந்தார் ( நல்ல மனிதர்). நைந்த நிலையில் இருந்த அந்த புத்தகத்தை இங்கு Scan செய்து pdf வடிவத்தில் இங்கு தந்துள்ளேன். புத்தக தலைப்பை சொடுக்கினால், அது Scribd க்கு அழைத்து சென்று புத்தகத்தை காட்டும். விரும்பினால் நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
குறிப்பு: புத்தகத்தின் பக்கங்கள் 1 முதல் 5 வரை, மற்றும் 7,8 பக்கங்கள் கிடைக்கவில்லை. ஸ்கேன் செய்யபட்ட தரமும் சுமாராகத்தான் இருக்கும்.
புத்தக விவரம்:
ஹிந்தி மூலம் : जैन धर्मं क्या कहता है?
தமிழ் வடிவம்: ஜைன தர்மம் என்ன சொல்லுகிறது?
ஆசிரியர்: திரு. ஸ்ரீ கிருஷ்ணதத்த பட்
வெளியீடு: சர்வோதய பிரசுராலயம், தஞ்சாவூர்
ஆண்டு: 1966
Tuesday, September 29, 2009
Monday, September 21, 2009
சமண தடயம்
சமீபத்தில் "சமண தடயம்" என்ற நூலை வாசித்தேன். மிக அருமையான தொகுப்பு. திருவண்ணாமலை மாவட்டம் "திருமலை" என்னும் தொன்மையான ஜைன ஆலயத்தில் நடைபெற்ற தொல்லியல் விழா கருத்தரங்கின் படைப்புகள் அடங்கிய தொகுப்பு. தொல்லியல் ஆய்வர்கள் திரு. நடன காசிநாதன் மற்றும் மா. சந்திரமூர்த்தி ஆகியோர் தொகுத்துள்ளார்கள். மணிவாசகர் நிலைய வெளியீடு.
Subscribe to:
Comments (Atom)
