Tuesday, October 20, 2009

தீபாவளி வாழ்த்தும், பகவான் மகாவீரரின் திருவுருவ தரிசனமும்

அனைவருக்கும் உளங்கனிந்த தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்.
கடந்த சனிக்கிழமை, சிங்கப்பூர் ஜைன சங்கத்தில்-(ஸ்தானக்) (இரண்டாம் தளம்) மிக அழகிய மகாவீரரின் சிலையை ஸ்தாபிதம் செய்திருக்கிறார்கள். ஞாயிறு  அன்று காலை பகவனை தரிசிக்கும் பேறையும், பூஜையை தரிசிக்கும் பேறையும் பெற்றோம். படங்கள் கீழே...


பகவானின் தரிசனம் காலை 7:30 முதல் 10:00 மணி வரை மட்டும் என அலுவலகத்தில் தெரிவித்தார்கள்.பூஜை செய்ய விரும்புபவர்கள், பூஜைக்குரிய மடி துணியை கட்டாயம் எடுத்து செல்ல வேண்டும். மேல் அதிக விவரம் வேண்டுவோர்: 6742 7829 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு, ஆங்கிலத்தில் பேசவும்.  
முகவரி:
Singapore Jain Religious Society

18 Jalan Yasin, Singapore 417991
Nearest MRT: Eunos (only 10 minutes walk from MRT).


Thursday, October 8, 2009

தர்மத்தின் பத்து லக்ஷணங்கள்

தசலாக்ஷனிக நோன்பு என்பது ஜைனர்களின் நோன்புகளில்(விரதங்களில்)  முக்கியமானது ஆகும். தசம் என்றால் பத்து. லக்ஷணம் என்றால் குணம் என்று பொருள்.
பத்து குணங்களோடு தொடர்புடைய விழா என்று பொருள். இந்த விரதத்தை புரட்டாசி திங்கள் வளர்பிறை ஐந்தாம் நாள் (பஞ்சமி திதி) தொடங்கி  14 -காம் நாள் வரை (சதுர்த்தசி) வரை அனுஷ்டிப்பார்கள். விரதத்தின் முடிவில், கோயிலில் விசேஷ  பூஜை செய்து நிறைவு செய்வார்கள். ஜைனர்கள் இந்நாட்களில் புலனடக்கதுடன் இருந்து ஜின பகவானுக்கு அபிஷேகம், அர்ச்சனை முதல்யவைகளை செய்து, ஒருவேளை மட்டும் உண்டு, காலை மாலை வேளைகளில் ஆகமங்கள் கேட்டல், படித்தல், மற்றும் தத்துவ விசாரங்களில் ஈடுபடுவர்.

இது  நிலையான விழாக்களின் வகையை சார்ந்தது. அது என்ன நிலையான விழா? நிலையான விழாக்கள் யாருடனும் தொடர்புபடுத்த படுவதில்லை (எ.கா. மகாவீர் ஜெயந்தி மற்றும் தீபாவளி பகவன் வர்த்தமான மகாவீரருடன் தொடர்பு கொண்டுள்ளது, கிருஷ்ண ஜெயந்தி மற்றும் ராம நவமி போன்றவை  அந்த மகாபுருஷர்களின் தொடர்பு உள்ளது)

இந்த விழாவில் உணவு மற்றும் விளையாட்டு வகையறாக்களுக்கு இடமில்லை. சரி அந்த பத்து குணங்கள்தான் என்ன என்று கேட்கிறீர்கள் அல்லவா? அவை:
  1.  உத்தம க்ஷமா (பொறையுடைமை),
  2. உத்தம மார்தவம் (மென்மை)
  3. உத்தம ஆர்ஜவம் (செம்மை)
  4. உத்தம சத்யா (மெய்ம்மை)
  5. உத்தம சௌசம் (நன்மை)
  6. உத்தம ஸம்யமம் (அடக்கம்)
  7. உத்தம தவம் (தவம்)
  8. உத்தம த்யாகம் (துறத்தல்)
  9. உத்தம ஆகிஞ்சன்யம் (ஒன்றின்மை)
  10. உத்தம பிரம்மச்சர்யம் (திறம்பாமை)
இந்த பத்து குணங்கள் பற்றி விரிவாகவும், ஏன் இதை இந்நாட்களில் கடைபிடிக்க வேண்டும் , எவ்வாறு இவை ஆன்ம நலனுக்கு பலனளிக்கும் என்பதை விரிவாக,  சுவையாக விளக்கி உள்ளார்  டாக்டர்.ஹுகம்சந் பாரில்லர் . அழகாக தமிழில் மொழி பெயர்த்துள்ளார் பரத சக்கரவர்த்தி ஜெயின் சாஸ்திரி. விவரம்:

புத்தகத்தின் பெயர்: தர்மத்தின் பத்து லக்ஷணங்கள்
ஹிந்தி மூலம் : டாக்டர்.ஹுகம்சந் பாரில்லர்
தமிழாக்கம்: பரத சக்கரவர்த்தி ஜெயின் சாஸ்திரி
பக்கங்கள் : 256
1981 ல் பிரசுரிக்கப்பட்டது

ஸ்ரீ குந்த குந்த கஹான் தீர்த்த சுரக்ஷா டிரஸ்ட்,
ஜைன இலக்கிய ஆராய்ச்சி நிலையம்,
15, சந்திரப்ப முதலி தெரு, சென்னை -600001