தமிழகத்தின் தலைசிறந்த இலக்கிய ஆளுமைகளில் ஒருவரும், விமர்சன பிதாமகருமான திரு வெங்கட் சாமிநாதனை எனக்கு மிகவும் பிடிக்கும். சில சமயங்களில் அவருடைய கருத்தை நான் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் கூட, அவரின் நியாயமான, நேர்மையான விமர்சனங்கள் மிகவும் ஆச்சர்யதிற்குரியவை.
அவரின் "இந்திய இலக்கியம் - வாழ்க்கை கூறுகளும் பண்புகளும்" என்ற தலைப்பில் மூன்று கட்டுரைகளை படித்து மகிழ்ந்தேன். இவற்றை படிக்கும்போது, சமஸ்கிருதத்தையும், ப்ராக்ருததையும், ஹிந்தியையும் படிக்காமல் போனதை எண்ணி வருந்துகிறேன். படித்திருந்தால் மேலும் தமிழுக்கு சேவை(?)செய்திருக்கலாம்.
Tuesday, March 17, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment